Saturday, November 27, 2010

எறும்பு யானைக் கதைகள்

1. ஒரு யானை வேகவேகமாக ஓடி வந்து கொண்டிருந்ததாம். அப்பொழுது அதனை வழிமறித்த எறும்பு கேட்டதாம், "ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வருகின்றாய்?"

யானை, "என்னை ஒரு சிங்கம் துரத்திக் கொண்டு வருகின்றது"

அதற்கு எறும்பு ஏதோ சொல்லப்போக, வெறிகொண்ட யானை எறும்பினை மிதித்து நசுக்கி விட்டதாம். எறும்பு என்ன சொன்னது....?

எறும்பு சொல்லியிருக்கும்... என் பின்னாடி மறைந்துக்கொள் என்று..

2. யானையும் எறும்பும் ஒரு நாள் கண்ணாம்பூச்சி விளையாடினவாம். எறும்பு கண்ணைப் பொத்திக் கொள்ள யானை அங்கிருந்த பிள்ளையார் கோவிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டதாம். எறும்பு எளிதாக யானையைக் கண்டுபிடித்து விட்டதாம் எப்படி?

ஏன்ன்னா...பிள்ளையார் சிலை சிறியதாயிருக்கும்...


3. எறும்புகளுக்கும் யானைக்கும் ஒரு நாள் சண்டையாம். மரத்தின் கீழ் படுத்திருந்த யானையின் மேல் மரக்கிளையில் இருந்த சில எறும்புகள் தவறி விழுந்தனவாம். அப்பொழுது ஒரு எறும்பு, "மாப்ளே, விடாதே அவனை அடி..." மற்றொரு எறும்பு, "மச்சான், அவன் தலையை அப்பயே காலால் நசுக்குடா...." இன்னொரு எறும்பு, "அவனை அப்படியே அசையவிடாம பிடி, இந்தா நான் வரேன்...."

இந்தா நானும் வரேன்... ஒரே கையில தூக்கிபோட...


3. ஒரு யானை ஒரு சிறிய குளத்தில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்ததாம். அப்பொழுது அங்கு வந்த சுண்டெலி யானையைப் பார்த்து, "ஏய், எழுந்திரு நான் குளிக்கவேண்டும்." என்றதாம். யானையும், "ஏம்பா, நானோ பெரிய உருவம். எழுந்தால் மீண்டும் உட்கார முடியாது. நீ சிறிய உடம்புக்காரன்தானே, அப்படி ஒரு ஓரமாக குளிக்கவேண்டியதுதானே" என்றது. சுண்டெலியோ, "இல்லையில்லை நீ எழுந்தே ஆகவேண்டும்." என்றது. யானை எழுந்து நின்றதும், சுண்டெலி, "சரி சரி உட்கார்ந்து குளி" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டப் பார்த்தது. யானைக்கோ ஒரே கோபம், படக்கென்று சுண்டைலியை வாரிப்பிடித்து, "ஏண்டா என்னைப்பார்த்தால் உனக்கு நக்கலாகத் தெரியுதா? என்னை எழுந்திரிக்கச் சொல்லிவிட்டு இப்ப நீபாட்டுக்குப் போறியே?" என்று கோபத்துடன் கேட்டது. அதற்குச் சுண்டெலி, "கோபப்படாதே நண்பா, என் ஜட்டியைக் காணவில்லை, அதை நீ எடுத்துப் போட்டிருப்பியோ என்று நினைத்தேன். இப்பொழுது அந்தச் சந்தேகம் தீர்ந்தது" என்றதாம்.

சம காமடி... :bigemo_harabe_net-06:

4. மூன்று புறா பறந்து போயிகிட்டுஇருந்துச்சாம். அப்ப ஒரு புறா முட்டை போட்டுச்சாம். அது கீழே விழவேயில்லையாம். ஏன்?

:thinko :thinko :thinko மற்ற இரண்டு புறாவும் கேச் பிடிச்சிருக்கும்...

5. மூன்று யானைகள் கரும்புத் தோட்டத்துக்குப் போனுச்சாம். இரண்டு யானைகள் கரும்புகளை நல்லா தின்னுச்சாம், ஒரு யானை மட்டும் திங்கலயாம்... ஏன்?

ஏன்னா... அதற்கு சுகர் வியாதி வந்திருக்கும்...
6. மூன்று யானைகள் பேருந்து நிறுத்தத்துக்கு வந்துச்சாம். ஒரு பேருந்தும் வந்துச்சாம், அதுல இரண்டு யானைகள் ஏறிப் போயிடுச்சாம். மூன்றாவது யானை மட்டும் ஏறலயாம்.... ஏன்?


ஏன்ன்னா... அந்த யானை வழி அனுப்ப வந்திருக்கும்...

1 comment: