Monday, February 21, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை

 



இலங்கை




1996 உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கும் வரை இலங்கை கிரிக்கட் அணி ஒரு போட்டியை வென்றால் அது எதிரணியின் அதிர்ச்சி தோல்வியாகவே கணிக்கப்பட்டது, 1996 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் அதை 'இலங்கை அதிர்ச்சி தோல்வி' என்று சொல்லும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை இலங்கை அடைந்த காலப்பகுதி அது. அர்ஜுன, அரவிந்த, சனத், வாஸ், முரளி என்கின்ற பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் இல்லை யென்றாலும் இலங்கை கிரிக்கட் அணி தன்னை விஸ்வரூபப்படுத்தி காட்டியிருக்க முடியுமா? என்றால் அதற்க்கு இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும். 1996 உலக கிண்ண போட்டிகளின் நாயகர்களான அர்ஜுனவும், அரவிந்தவும் 1999 உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் படுதோல்விக்கு பின்னர் கறிவேப்பிலையை போல தூக்கி எறியப்பட்டது வரலாறு, இன்று அந்த வரலாற்றில் வாஸும், சனத்தும் உள்ளடக்கம்.



இலங்கை தேர்வுக்குழுவினர் சனத்தை தேர்வு செய்யாததை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சமிந்த வாஸை தேர்வு செய்யாதது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத வாஸ் இங்கிலாந்து பிராந்திய அணிகளுக் கிடையிலான போட்டியில் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரருக்கான விருதினை வென்று தன்னை வெளிக்காட்டியிருந்தார். தற்போது இலங்கை பிராந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்துவீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தார், ஆனால் இந்த போட்டிகளுக்கு முன்னதாகவே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது வாசினதும் இலங்கை கிரிக்கட் அணியினதும் துரதிஸ்டம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியிலாவது வாசினை அணியில் சேர்த்திருக்கலாம், ஆனால் வாஸ் சிறப்பாக பந்து வீசினால் தமது தேர்வு தவறாகிவிடும் என்கின்ற பயம் தேர்வாளர்களுக்கு.



நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவருக்கும் பதிலாக சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் 'டில்ஹார பெர்னாண்டோ'வுக்கு பதிலாக கூடவா சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாது? இலங்கை ஆடுகளங்களில் குறிப்பாக பிரேமதாசா ஆடுகளத்தில் வாஸ் அளவிற்கு சிறப்பாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளர் யாருமே சர்வதேச அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அடுத்து அண்மைக்கால இலங்கையின் நம்பிக்கை சுழல் பந்து வீச்சாளரான 'சுராஜ் ரன்டிப்' நீக்கப்பட்டு 'ரங்கன கேரத்' சேர்க்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பதை என்னைபோல இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் .அதேபோல உலகக் கிண்ண ஸ்பெசலிஸ்ட்டாக அணியில் இணையும் 'சாமர சில்வா' சென்ற உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்துவாரா என்பது சந்தேகமே.



இப்படி அணியின் தேர்வுக்குழுவின் தேர்வின் மீது திருப்தியில்லா விட்டாலும் இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான சவாலை கொடுக்க கூடிய சிறந்த அணியாக இலங்கை உள்ளதையும் மறுக்க இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளம், பந்துவீச்சாளர் பேதமில்லாமல் ஓட்டங்களை வேகமாக குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் டில்ஷான் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் மிகப்பெரும் பலம். nanbeanda அதிலும் ஆசிய ஆடுகளங்களில் டில்ஷானின் அதிரடியை சமாளிப்பது எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். அதே நேரம் டில்ஷானுடன் களமிறங்கும் சக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 'உப்புள் தரங்கா'வை ஆரம்பத்தில் வெளியேற்றா விட்டால் தரங்கவினது ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.



அடுத்து மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கும் குமார் சங்கக்காராவை அவளவு சீக்கிரத்தில் வெளியேற்ற முடியாது, அட்டைபோல ஆடுகளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்ககார யாரவதொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் இணைப்பாட்டத்தை ஏற்ப்படுத்தினால் எதிரணி கதை அம்பேல்தான். தனது விக்கட்டை இழக்காமல் ஓட்டங்களை குவிக்கும் திறமையுடைய சங்ககார ஒருபுறத்தில் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனித்து நின்று கணிசமான ஓட்டங்களை பெற்று போட்டியை பந்து வீச்சாளர்கள் கைகளிலாவது ஒப்படைக்க கூடியவர். ஆரம்ப நாட்களில் மந்தமாக இருந்த ஓட்டக் குவிப்பு வேகம் ஐ.பி.எல் போட்டிகளின் பின்னர் அதிகரித்திருப்பதும் இலங்கைக்கு பலம்.



நான்காம் இலக்கத்தில் களமிறங்கும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் போம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் (in form) எதிரணிகள் பாடு திண்டாட்டமாகவும்; போம் மோசமாக இருக்கும் பட்சத்தில் (out of form) எதிரணிகள் பாடு கொண்டாட்டமாகவும் இருக்கும். வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை ரகத்தை சேர்ந்த மஹேலாவின் ஓட்டக் குவிப்பிற்கு 2003 & 2007 உலககிண்ண போட்டிகள் சான்று. தனி மனிதனாக போட்டிகளின் முடிவை மாற்றக் கூடிய திறமையுடைய மஹேலாவை வந்தவுடன் வெளியேற்றாவிட்டால் பின்னர் வெளியேற்றுவது எதிரணிகளுக்கு சிரமமாக இருக்கும். சுழல் பந்துவீச்சிற்கு மிகவும் சிறப்பாக ஆடும் மஹேலவுடன் இலங்கையின் மத்திய வரிசைக்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு வீரர் 'திலான் சமரவீரா'.



சாமர சில்வா, கப்புகெதர இருவரையும்விட திலான் சமரவீரா ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். அண்மைக்காலமாக இவரது ஆட்டத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றம் இவரது வேகமான ஓட்டக் குவிப்புத்தான். நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்கும் போட்டிகளை கொண்டு செல்வதற்கு திலான் சமரவீர மிகவும் பொருத்தமாக இருப்பார். ஆறாம் இலக்கத்தில் 'அஞ்சலோ மத்யூஸ்' மற்றும் ஏழாம் இலக்கத்தில் 'திசர பெரேரா' இருவரும் இறுதிநேர அதிரடிக்கு உதவக் கூடியவர்களாயினும் அவர்களில் மத்யூஸ் எதிரணியின் ஓட்டங்களை துரத்தும்போது போட்டியின் தன்மைக்கேற்ப ஆடக் கூடியவர்.



பந்து வீச்சை பொறுத்தவரை 2011 உலக கிண்ண போட்டிகளில் மிகவும் சிறந்த பந்துவீச்சு வரிசை என்று இலங்கை அணியை சொல்லலாம். அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கக் கூடிய 'முரளிதரன்' மற்றும் 'லசித் மலிங்க'வுடன் ஆசிய அணிகள் தவிர்த்து எந்த அணியையும் நிலைகுலைய வைக்கும் திறமையுடைய 'அஜந்த மென்டிஸ்' அணியில் இருப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். இவர்கள் தவிர கடந்த ஓராண்டுக்கு மேலாக தரவரிசையின் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வரும் நுவான் குலகேகரவும்; சகதுரை வீரர்களாக பந்துவீச்சில் அண்மைக்காலமாக பிரகாசிக்கும் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திசர பெரேராவும் இலங்கை பந்துவீச்சு வரிசையின் பலம்.



இவற்றைவிட சொந்த மண்ணில் முதற் சுற்று ஆட்டங்கள் இடம்பெறுவதும், அடுத்தகட்ட போட்டிகள் இந்திய ஆடுகளங்களில் இடம்பெறுவதும் இலங்கைக்கு சாதகமான விடயங்களே. ஆனாலும் பலமான இந்திய, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை இலங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும். 1996 உலக கோப்பை வெற்றியின் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளில் அரைஇறுதிக்கும் 2007 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிக்கும் தெரிவான இலங்கை அணி இம்முறை காலிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும் ஆயினும் அடுத்த நிலைகளை தாண்டி கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றுமா? என்கின்ற கேள்விக்கு கைப்பற்றுவதற்கு தகுதியான அணிதான் என்பது சரியான பதிலாக இருக்கும்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

திலகரட்னே டில்ஷான்
உப்புள் தரங்க
குமார் சங்ககார (தலைவர்) & (விக்கட் காப்பாளர்)
மஹேல ஜெயவர்த்தன
திலான் சமரவீர
அஞ்சலோ மத்யூஸ்
திசர பெரேரா
நுவான் குலகேகர
முத்தையா முரளிதரன்
லசித் மலிங்க
அஜந்த மென்டிஸ்

மிகுதி நால்வரும்

சாமர கப்புகெதர
சாமர சில்வா
டில்ஹார பெர்னாண்டோ
ரங்கன ஹேரத்

ப‌டிக்க‌ ம‌ற‌க்காதீங்க‌...

 


இந்த‌ ம‌ட‌ல் என‌க்கு மின்ன‌ஞ்ச‌ல் மூல‌மா வ‌ந்த‌து. இந்த‌ க‌தையும் க‌ருத்தும் எனக்குப் பிடித்திருந்த‌து. அத‌னால் ப‌திவிடுகிறேன்.



சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?


மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"


"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்

இந்த‌ ம‌ட‌ல் என‌க்கு மின்ன‌ஞ்ச‌ல் மூல‌மா வ‌ந்த‌து. இந்த‌ க‌ருத்து எனக்குப் பிடித்திருந்த‌து. அத‌னால் ப‌திவிடுகிறேன்


யோவ் அந்த பட்டன் தான்யா. சட்டுனு அமுக்கி படம் எடுய்யா பரதேசி. நீ வேற படுத்தறியே!
வீட்டுக்காரங்க வர்றதுக்குள்ளே இத்தனையும் முடிச்சுட்டு ஓடணும்.


இங்கே தானே என் சைக்கிளை பார்க் பண்ணினேன்.
ஐயோ! இத்தோட 37 சைக்கிள் ஆச்சு. இதுவாவது திறக்கணுமே!




போங்கய்யா உங்க "ஹாலோவீனும்" நீங்களும். என் பாடு எனக்கு தான் தெரியும். "நம நமன்னு" சில்மிஷமா அரிக்குது. எந்த தலைன்னு தெரியலியே!!!




பால் சக்கரை வேண்டாம் - அப்படியே சாப்பிடுவேன் !





ப‌டித்த‌து பிடித்த‌து....

 


நான் இதைப் ப‌டித்து மிக‌வும் ர‌சித்தேன். ந‌ல்ல‌ ந‌கைச்சுவையாக‌ இருந்த‌து. நீங்க‌ளும் ப‌டிச்சுப் பாருங்க‌.


பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.
***



நீ சிரித்தால் “ரிங்டோன்”

நீ கோபப்பட்டால் “வைப்ரேட்டிங்”

நீ தும்மினால் “பீப் டோன்”

உன் கண்கள் கலங்கினால் “பேட்டரி லோ”

நீ என்னை மறந்தால் “சுவிட்ச் ஆப்”
***



உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால்
என்னிடம் கூறுங்கள்,
என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை
என்றாலும் என்னிடம் கூறுங்கள்,
பிரச்சனையை நான் உருவாக்குகிறேன்.

எவ்வளவோ செய்யறோம் இதை செய்யமாட்டோமா?

பேஸ்புக் நிறுவனரை பண உதவி கேட்டு தொந்தரவு செய்த நபர்


 

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர் பேர்க்கை தொடர்பு கொள்ள முயன்ற நபர் பற்றிய செய்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகிய வண்ணமே உள்ளன.



பிரதிப் மனுகொண்டா (31) என்ற அந்த இந்திய வம்சாவளி நபர் ஷூக்கர் பேர்க்கை பல முறை சந்திக்க முயன்றுள்ளார். அவரது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் அதற்கு பண உதவி செய்யச் சொல்லுவதுமே அவரது பிரதான கோரிக்கையாகும்.

இவர் ஷூக்கர் பேர்க்கின் பேஸ்புக் பக்கத்தில் மெசேஜ்களை பதிவு செய்திருந்தார்.




அதன் பின்னர் அவரது வீட்டிற்கு பூங்கொத்துக்களுடன் கடிதமொன்றினையும் அனுப்பியிருந்தார்.



இவற்றிற்கு மேலதிகமாக பேஸ்புக் நிறுவன காரியாலத்திற்கும், ஷூக்கர் பேர்க்கின் வீட்டிற்கும் பல முறை சென்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களும் பலமுறை இவருக்கு எச்சரிக்கை செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஷூக்கர் பேர்க்கின் தங்கை ரண்டி மற்றும் காதலி ப்ரிஸ்ஸில்லா சான் ஆகியோரையும் சந்திக்க முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நபர் தொடர்பாக ஷூக்கர் பேர்க் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கு அந்த நபரினால் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Monday, February 7, 2011

சாம்சங் கேலக்ஸி டேப்ளட் பிசி

பெர்சனல் கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்த நாளிலிருந்து, தொழில் நுட்ப வளர்ச்சி முடங்கிவிடாமல், தொடர்ந்து வளர்ந்து கொண்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களைத் தொடர்ந்து, மக்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கைகளில் வைத்து இயக்க கம்ப்யூட்டர்களை எதிர்பார்த்தனர். அதற்கென லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கிடைத்தன.  பின் இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்களில், டச் ஸ்கிரீனை எதிர்பார்த்த மக்களுக்கு   டேப்ளட் பிசிக்கள் கிடைத்தன. ஆனால் மக்களின் பயன் பாட்டில்,  தொடக்கத்தில் இவை இடம் பெறவில்லை. லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் எடை குறைவாக, எளிதாகக் கையாள ஒரு கம்ப்யூட்டரைத் தேடினார்கள். அதற்கான விடையாக, நெட்புக் அல்லது நெட் டாப் கம்ப்யூட்டர்கள் கிடைத்தன. இவற்றைக் காட்டிலும் சிறியதாக, 5 முதல் 10 அங்குல அகலத்தில் தொடுதிரையுடன் கூடிய கம்ப்யூட்டரை நாடிய போது, முன்னர் அறிமுக நிலையில் இருந்த டேப்ளட் பிசிக்கள், புதிய விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அறிமுகமாகி வருகின்றன.
பெர்சனல் கம்ப்யூட்டரை முதலில் கொண்டு வந்த ஆப்பிள் நிறுவனமே, டேப்ளட் பிசியையும் அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் தன் ஐ–பேட் சாதனத்தை இந்த வகையில் கொண்டு வந்தது. ஆனால் இதன் பயன்பாடு மக்களின் தாகத்திற்குச் சரியான தீனி இடாததால், 2010 ஆம் ஆண்டில் பல நிறுவனங் கள் டேப்ளட் பிசிக்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன.
டேப்ளட் பிசிக்களைப் பல நிறுவனங்கள் வெளியிடத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களிடம் இடம் பிடிக்க இருக்கும் இந்த சாதன விற்பனைச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் இடம் பிடிக்க இப்போதிருந்தே தயாராகி வருகின்றன. அந்த வகையில், அண்மையில் சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி டேப்ளட் பிசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அதன் சிறப்புகளை இங்கு காண்போம்.
ஐ–பேட்  டேப்ளட் பிசிக்கு போட்டியாக இது சந்தையில் உலா வரும் என்று அனைவரும் கணித்துள்ளனர்.  ஏறத்தாழ ஐ–பேட்   சாதனத்தைப் போல வடிவில் இருந்தாலும் (பரிமாணம் 190.09 து 120.45 x  11.98மிமீ ), கேலக்ஸியின் டி.எப்.டி. திரை 7 அங்குல அகலம் கொண்டு தொடுதிரை யாக   உள்ளது. (ஐ–பேட் திரை 9.7 அங்குலம்). இது ஒரு சிறிய நூல் வடிவில் உள்ளது. இரண்டின் பரிமாணமும் ஒரே வகையில் இருந்தாலும், ஐ–பேட் சாதனத்தின் எடையைக் காட்டிலும் குறைவாக 380 கிராம்  எடை உள்ளது.  எனவே ஒரே கையில் பிடித்து, நடந்து கொண்டிருக்கும் போதே இதனை எளிதாக இயக்கலாம்.  இதன் திரை  1024 x  768 ரெசல்யூ சனில் பார்ப்பதற்கு பளிச் என உள்ளது.
இதன் கீ போர்டு அழுத்துவதற்கு மற்ற கீகளின் இடையூறு இன்றி எளிதாக உள்ளது. இந்த வகையில் இது ஒரு மிகப் பெரிய பிளாக் பெரி ஸ்மார்ட் போன் போலத் தோற்ற மளிக்கிறது.  இதில் ஆண்ட்ராய்ட் 2.2. ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஒரு கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசருடன் இயங்குகிறது. டெஸ்க்டாப், ஸ்லைடிங் அப்ளிகேஷன் ட்ரே, விட்ஜெட்கள், மேலாக உள்ள ஸ்டேட்டஸ் பார் ஆகியவை மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. அலெர்ட் கிடைத்தால், விரல் தொட்டு இழுத்து அமைத்துக் கொள்ளலாம்.
எலக்ட்ரானிக் டெக்ஸ்ட்களைப் படிக்க, சாம்சங் இதில் மூன்று அப்ளிகேஷன்களைத் தந்துள்ளது. நியூஸ் படிக்க ப்ரெஸ் டிஸ்பிளே (Press Display) , இபுக் படிக்க கோபோ (Kobo) இதழ்கள் வாசிக்க ஸினியோ (Zinio) . இதழ்களைப் படிக்கும் போதுதான், இன்னும் கொஞ்சம் கூடுதல் அகலத்தில் திரை இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆண்ட்ராய்ட் மார்க்கட் அப்ளிகேஷன் ஸ்டோரை, மிக எளிதாக இதன் திரை மேலுள்ள ஐகான் அழுத்திப் பெறலாம். விரைவாக அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திட முடிகிறது.
பிளாஷ் பிளேயர் 10.1 இதில் இயங்குவதால், இணையப் பக்கங்களை வேகமாக இயக்கிப் பார்க்க முடிகிறது.
கொடுக்கப்பட்ட மெமரி கார்ட் ஸ்லாட் மூலம், இதன் நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.  GSM/GPRS/EDGE நெட்வொர்க்கில் இயங்கும் இந்த டேப்ளட் பிசியில் 3ஜி நெட்வொர்க் இணைப்பும்  தரப்பட்டுள்ளது. அதிவேக இணைய பிரவுசிங் மேற்கொள்ள வை–பி  உள்ளது. மற்ற சாதனங்களுடன் வயர்லெஸ் இணைப்பிற்கு புளுடூத் 3.0 கிடைக்கிறது.
டேப்ளட் பிசியின் முன்பக்கத்தில், வீடியோ அழைப்புகளுக்கு 1.3 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் வழக்கமான 3 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமராவும்  தரப்பட்டுள்ளது. வழக்கமான ஜியோ மேக்னடிக் சென்சார் இணைப்புடன், கைரோ ஸ்கோப் சென்சார் மற்றும் ஆக்ஸிலரோமீட்டர் ஆகியன இணைந்துள்ளன.
இதனைப் பயன்படுத்துபவர்கள், ஹை டெபனிஷன் வகை திரைப்படங்களை இதன் 7 அங்குல திரையில் பார்த்து ரசிக்க முடியும்.  இதில் Swype  எனப்படும் திரையில் இயங்கும் கீ போர்டும் கிடைக்கிறது. ஆபீஸ் டாகுமெண்ட்களைக் காண Think Free Suite   என்ற அப்ளிகேஷன் தரப்படுகிறது.  இதில் தரப்பட்டுள்ள திறன் கொண்ட பேட்டரி யினால், ஏழு மணி நேரம் தொடர்ந்து இந்த டேப்ளட்  பிசியை இயக்கலாம். அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டேப்ளட் பிசி, ஆசிய நாடுகளிலும் படிப்படியாக விற்பனைக்கு வந்துள்ளது.  இந்தியாவில் வரும் டிசம்பர் இறுதிக்குள், இது விற்பனைக்கு வரலாம். மேற்கு நாடுகளில் இதன் விலையைப் பார்க்கையில், இந்தியாவில் இது அதிக பட்சமாக ரூ.40,000 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பபார்க்கப்படுகிறது.

எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?

 

 

பிளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு பிளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்?
உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள் ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ் ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம். ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது. எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.

Tuesday, February 1, 2011

2009ல் மட்டும் தோற்ற படங்களால் தமிழ் சினிவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு

2009ல் மட்டும் தோற்ற படங்களால் தமிழ் சினிவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மட்டும் ரூ200கோடிக்கு மேல் என்கிறது ஒரு தகவல்
வெற்றிப் படங்களைப் பட்டியல் போடுவதுதான் சிரமம். காரணம் அவற்றின் மிக சொற்ப எண்ணிக்கை. தோல்விப் படங்களுக்கென்ன… ஏராளமாய் கிடக்கிறது!

அவற்றின் பட்டியல்

1வில்லு
2
தோரணை
3
ஆனந்தத்தாண்டவம்
4
சர்வம்
5
பொக்கிஷம்
6
19777மரியாதை
8
யோகி
9
ஜெகன்மோகினி
10
ஆதவன்

அவற்றின் விபரம் பின்வருமாறு
வில்லு-
ஆண்டின் முதல் முதல் தோல்வியே விஜய் படத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. (ஆனால் படம் எனக்கு கொஞ்சம் பிடித்து தான் இருந்தது )
இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே மாபெரும் தோல்விப்படம் என்ற பெயரினைச் சம்பாதித்துக் கொண்டது படம் விஜய் நடித்த வில்லு. இந்திப் படத்தின் தழுவலாக வந்த இந்தப் படத்தை பிரபு தேவா இயக்கியிருந்தார்.
ஐங்கரன் தயாரித்த இந்தப் படம் ஒட்டுமொத்தமாக பெரும் இழப்பைத் தந்தது.
தோரணை-
விஷாலுக்கு செமத்தியான சறுக்கலாக அமைந்த படம் தோரணை. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என இதில் அவர் வைத்த அகலக் கால்தான் இந்த சறுக்கலுக்குக் காரணம் என்று குறிப்பாக சொல்ல முடியாது.
ஆனந்தத் தாண்டவம்-
சுஜாதாவின் நாவலைப் படமாக்குகிறார்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் படத்துக்குப் போனார்கள். ஆனால் சரியான அறுவையாக எடுத்து வைத்திருந்தார் காந்தி கிருஷ்ணா. நாயகி வேடத்தில் நடித்த தமன்னா, சற்றும் பொருத்தமில்லாமல் எரிச்சலூட்ட, படம் பப்படமாகிவிட்டது. நஷ்டம் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு.
சர்வம்-
பில்லா ரீமேக்கில் வெற்றியை ருசித்த விஷ்ணுவர்தன் தந்த மிகப்பெரிய தோல்விப் படம் இந்த சர்வம். இந்தப் படத்துக்குப் பிறகுதான் எழ முடியாத அடி வாங்கியது ஐங்கரன் நிறுவனம்.
பொக்கிஷம்-
ரூ.10 கோடி பட்ஜெட்டில் சேரன் எழுதிய லவ் லெட்டர் இந்தப் படம். கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத
ஒரு லவ் லெட்டருக்கு இவ்வளவு செலவா என்ற கடுப்பில் ரசிகர்கள் கிழித்துப் போட்ட லெட்டர் இது!
1977-
சரத் குமாரின் இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 15 கோடி. குழந்தைத்தனமான கிராபிக்ஸ், அதைவிட மோசமான திரைக்கதை எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்து இயக்கிய தினேஷை கடனாளியாக்கியதுதான் மிச்சம்.

மரியாதை-

விக்ரமனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் சுக்கு நூறாக உடைத்தெறிந்த படம். விஜய்காந்த் இனியும் நடிக்க வேண்டுமா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்குப் போன நிலைமை, இந்தப் படத்தால்.
யோகி-
அமீர் முதல்முறையாக நாயகன் வேஷம் போட்ட படம் இது. ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கும், இந்தப் படத்தை அமீர்- சுப்பிரமணிய சிவா கொடுத்த விதத்துக்கும் சரியான மேட்ச் இல்லாததால் தோல்வியைத் தழுவிய படம். ஆனாலும் ஒரு நடிகராக இந்தப் படத்தில் ஜெயித்தார் அமீர்.
ஜெகன்மோகினி-
70களில் வந்த சூப்பர் ஹிட் ஜெகன் மோகினியை, ப்ளாப் மோகினியாக என்.கே.விஸ்வநாதன் காட்டிய படம் இது. இசைக்கு இளையராஜா, மசாலாவுக்கு நமீதா என இருந்தும், நல்ல திரைக்கதை இல்லாததால் தோற்றுப் போன படம் இது.
ஆதவன்-
தயாரிப்பாளர் தரப்பில் நல்ல லாபம் என்றும், விநியோகஸ்தர்கள் தரப்பில் சுமார் என்றும், ரசிகர்கள் தரப்பில் மொக்கை என்றும் விதவிதமான விமர்சனங்களைக் கிளப்பிய உதயநிதியின் படம் (அப்ப குருவி மட்டும் சூப்பரோ). அளவுக்கதிகமான எதிர்பார்ப்பே வினையாகிப் போனது இந்தப் படத்திலும். (நம்ம சூர்யா நடிச்சும் தோற்றுவிட்டதே)

இவற்றின் தோல்விக்கு முக்கிய காரணம் அவற்றின் திரைக்கதையே ஆகும். மக்கள் இப்பொழுது படத்தில் கதை இருக்கிறதா என்று பாக்கிறாங்க பார்த்து படம் பண்ணுங்க