Monday, March 7, 2011

காதலியின் நியதி

யாரை நீ காதலித்தாயோ...
அவள் வேறொருவனைக் காதலித்தாள்...
யாரை நீ காதலிக்கின்றாயோ...
அவள் வேறொருவனைக் காதலிக்கின்றாள்...
யாரை நீ காதலிக்கப் போகின்றாயோ...
அவளும் வேறொருவனையே காதலிப்பாள்...

உன்னுடைய எதை இழந்தாய்..?
ஏன் தாடி வளர்க்கின்றாய்...
யாரை நீ கொண்டு வந்தாய்..?
அவளை நீ காதலிக்க..
யாருக்கு உன் காதலை சொன்னாய்...?
அவள் உன்னைக் காதலிக்க...
யார் உன்னைக் காதலித்தாள்..?
நீ மீண்டும் காதலிக்காமல் இருக்க...

காதலை எங்கிருந்து பெற்றாய்...
அது இங்கேயே பெறப்பட்டது.
யார் இன்று உன்னுடைய காதலியோ..
அவள் நாளை
இன்னொருவனுடையவளாகின்றாள்
மற்றொரு நாள் அவள் வேறொருவனுடையதாகின்றாள்..??

இதுவே காதலியின் நியதியும்.. காதலின் சாராம்சமும் ஆகும்..!!!




இதை என்க்கு உணர்த்திய  என் காதலிக்கு நன்றி

No comments:

Post a Comment